புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமூகவியல் சமூகமானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்

சமூக விஞ்ஞானங்களில் (Social Sciences) முதன்மையான துறையாகக்கருதப்படும் சமூகவியல் (Sociology) வயதில் இளையது. 19ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இத்துறை இன்று அகலக்கால் பதித்து ஏனைய சமூக விஞ்ஞானங்களை விட ஆய்வுத் துறையில் முன்னணி வகிக்கிறது. சமூகத்தையே தனது ஆய்வுத் தளமாகக்கொண்டியங்கும் இத்துறைக்கு வரவேற்பு பலமானதாகும். வட ஆபிரிக்காவில் பிறந்த இப்னு கல்தூனின் (Ibnu Khaldun) சிந்தனையில் உருவான இத்துறை மேற்கேத்தேய அறிஞர்களினால் வளர்த்தெடுக்கப்பட்டது. சமூகவியலைப் போன்றே, மானிடவியலும் மனிதனை ஆராயும் தளமாகக்கொண்டியங்கும் துறையாகும்.
இந்தவகையில், சமூகவியல், சமூக மானிடயவியல் என்பவற்றின் அடிப்படை எண்ணக்கருக்களை பற்றிய தமிழ் மொழி மூல நூல்கள் மிகவும் குறைவாகும். அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இவ்வாறான ஒரு கன்னி முயற்சியில் இறங்க தீர்மானித்தேன். அந்த முயற்சியின் பலனாக உருவானதே இந்நூலாகும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமன்றி, சாதாரண பொதுமக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு எண்ணக் கருக்களையும் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் பல உபதலைப்புக்களுடனும், உதாரணங்களுடனும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமூகவியலை போன்று மானிடவியலும் ஒரு விரிந்த துறை என்பதால், முக்கியமான மானிடவியல் எண்ணக்கருக்கள் மாத்திரமே இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கலாநிதியு.றமீஸ்,

 


பொ.கனகசபாபதி
Kanakasababathy, P

             திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இலங்கை, இந்திய, கனடியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். அவரது படைப்புக்களிற் சில, அதிபர் ஒருவரின் கூரிய பார்வையில், பெற்றோர்ஃ பிள்ளை உளவியல், மாறன் மணிக்கதைகள் (இருபகுதிகள்), திறவுகோல், மனம் எங்;கே போகிறது என்ற தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன.
             சென்னைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியலில் சிறப்புப் பட்டம் பெற்று மகாஜனக் கல்லூரியில் அவர் ஏற்றுக் கொண்ட ஆசிரியப் பணி, சக மனிதர்களை மேம்படுத்தும் அவரது நோக்கத்திற்கு உவப்பாய் அமைந்தது. அதிபராய் அவர் பணிபுரிந்த காலங்களிற் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் பெருவளர்ச்சியுற்றன. புலம் பெயர்ந்து நைஜீரியாவில் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், கனடாவில் ரொறன்ரோ  பாடசாலைச் சபையின் கல்விசா